chidambarambabuji.blogspot.com

Readers

God is love

God is love

10.12.24

பதிவு ஏன் அவசியம்?

தினசரி வாழ்க்கை பதிவுகளை எழுத்தாலும் எண்ணாலும்,புகைப்படங்களாலும் பிற ஒளி,ஒலி பதிவுகளாலும் அமைத்துகொள்வது அவசியம்.இதை ஆங்கிலத்தில் Journal என்று அழைப்பார்கள். புகழ் பெற்ற ஆளுமைகளிடம் இந்த பழக்கம் தவறாமல் இருந்துள்ளது.உதாரணமாக அனந்தரங்கம் பிள்ளையின் நாள் குறிப்பு.மறைந்த தமிழக முதல்வர். எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள்.காலத்தை பிரதிபலிப்பதுதான் இத்தகைய பதிவுகள்.மனதால் மட்டும் ஞாபகத்தில் பதிவு செய்து வைப்பது இந்த கால கட்டத்தில் பயனற்றது.நீதி மன்றங்களும், அரசு இயந்திரங்களும் ,எழுத்து பூர்வமான ஆதாரங்களையே அங்கீகாரம் செய்கின்றது.
எழுத படிக்க தெரிந்தவர்கள் அனைவரும்,  தினசரி வாழ்க்கையை அதன் நிகழ்வுகளை கமுக்கமாக  எண்ணாலும், எழுத்தாலும் சுருக்கமாக பதிவு செய்வது நமக்கு மட்டுமல்ல ,சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்.

கருத்துகள் இல்லை: